நடிகை நமீதாவுக்கு வீர் என்பவருடன் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இது ஒரு காதல் திருமணமாகும். நமீதாவிடம் வீர் தனது காதலை எப்படி சொன்னார் என்பது குறித்து தற்போது அவர் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து கூறும்போது, வீரை நான் முதன் முதலில் சந்தித்தபோது எனக்கும் அவருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை உணர்ந்தேன். கடற்கரையில் ஒருநாள் வைத்து என்னிடம் காதலை தெரிவித்தார். சந்தோஷபட வேண்டிய நேரத்தில் நான் அவருக்கு பதில் சொல்ல முடியாமல் அழுது விட்டேன்.
பின்னர் பிக்பாசில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தபோது அவர்தான் எனக்கு ஊக்கம் அளித்தார். பின்னர் வெளியில் வந்த நாளில் என்னிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். அவர் கேட்டிருக்கா விட்டாலும் நான் அவரிடம் கேட்டிருப்பேன் என்றார்.
நமீதாவின் திருமணத்தில் காயத்தி, சக்தி, ஆர்த்தி ஆகிய 3 பேர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: