Monday, 27 November 2017

பேஸ்புக்கில் பதிவிட்ட 20 மணி நேரத்திற்குள் வாலிபருக்கு அடித்த அதிர்ஷ்டம்.!


இங்கிலாந்தில் வசிப்பதற்கு வீடு இல்லாமல் சாலையில் வசித்து வந்த நபர் பேஸ்புக்கில் பதிவிட்டதை அடுத்து அவருக்கு வசிப்பதற்கு வீடும் வேலையும் கிடைத்துள்ளது.

மைக்கேல் பீக்ஸீன் என்ற நபர் 8 மாதத்துக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இவருக்கு வேலை மற்றும் தங்குவதற்கு இடம் கிடைக்காததால் சாலையில் வசித்துள்ளார்.

ஷான் என்பர் இவரிடம் பேசி இவரை பற்றிய தகவல்களை சேகரித்துள்ளார்.

அதன் பின் அந்த நபருக்கு உதவுவதற்கு முன்வர வேண்டும் என பேஸ்புக்கில் பதிவிட்ட 20 மணிநேரத்திற்குள் ஒருவரின் வீட்டில் தங்குவதற்கு ஒரு அறை கிடைத்தது மேலும் இவருக்கு வேலையும் கிடைத்தது.

இது குறித்து மைக்கேல் கூறியதாவது பேஸ்புக் பற்றி எனக்கு அதிகமாக தெரியாது மக்கள் என்னிடம் வந்து நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவலாம் என கேட்கின்றனர்.

இது போன்று நடக்கும் என்று எண்ணி பார்த்ததே கிடையாது என ஆச்சரியமாக கூறியுள்ளார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: