Monday, 27 November 2017

பேஸ்புக் நேரலையில் உயிருக்கு போராடிய பெண்.! சிறிது நேரத்தில் காப்பாற்றபட்ட சுவாரஸ்யம்.!!


அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பேஸ்புக் நேரலை மூலம் பலருடன் இணைந்து பிராத்தனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார்.
இதனை நேரலையில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இவருடைய மகனுக்கு கண் தெரியாததால் அந்த நேரத்தில் அவருக்கு உதவி செய்யமுடியவில்லை.
இதனையடுத்து இதனை பார்த்த பக்கத்துவீட்டு பெண் தன் மகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் உடனே அந்த இடத்திற்கு வந்து மயக்கம் அடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றினார்.
இரத்த அழுத்தம் அதிகமானதால் அவருக்கு அடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பேஸ்புக் மூலம் தனது உயிர் காப்பாற்றப்பட்டதற்கு அந்த பெண் நன்றி கூறியுள்ளார். மேலும் தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: