Tuesday, 5 December 2017

தமிழ் சினிமாவின் தலையெழுத்தை மாற்றத்தான் நான் ஹீரோயின் ஆனேன்..! பிரபல நடிகை பேச்சு...!!


தமிழில் பீட்சா, குள்ளநரிக்கூட்டம் ஆகிய படங்களில் நடித்து வெகுவான சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரம்யா நம்பீசன். இவர் விஜய் சேதுபதியின், ‘சேதுபதி’ படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து ‘ஒருநாள் ஒரு கனவு’ என்ற படத்தில் அப்போது முன்னணியில் இருந்த நடிகர் ஸ்ரீகாந்திற்கு தங்கை வேடத்தில் நடித்தார். மேலும், சில மலையாள படங்களில் நடித்துள்ளார். நடிகை நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசிலுடன் சப்பா குரீஷு என்ற படத்தில் லிப்லாக் முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் ரம்யா.

குண்டான உடலமைப்பை பெற்றிருந்தாலும், தமிழில் இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. ஆனால், குணசித்திர வேடங்களில் நடித்தால் மீண்டும் ஹீரோயினாக முடியாது என்ற விதி ஒன்று உள்ளது. அதை முறியடிக்கவே நான் மீண்டும் ஹீரோயின் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

மேலும், சத்யா தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம். இதில் என் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ரம்யாநம்பீசன்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: