இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் மண் வாசனை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேவதி. இதனை தொடர்ந்து காதல் மன்னன்,
தேவர் மகன், கிழக்கு வாசல் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர். சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த இவரது வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
கடந்த 2013ல் விவாகரத்து பெற்ற இவர் 2016ல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அந்த குழந்தைக்கு மகி என பெயரிட்டு சந்தோஷமாக இருந்து வருகிறார்.
தற்போது சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு தற்போது தெரியவந்துள்ள-து. இவர் கேரளாவில் கிளாசிக் லுக்குடன் ஒரு ஆடம்பர வீட்டை கட்டி உள்ளார்.
இதன் மதிப்பு ரூ 3 முதல் 4 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே போல சென்னையில் இவர் வசிக்க ஹைடெக் வீடு ஒன்றையும் கட்டி உள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ 5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
அது மட்டும் அல்லாமல் இரண்டு ஆடம்பர கார்களை வைத்துள்ளார். இந்த கார்களின் மதிப்பு ரூ 40 லட்சத்திற்கு மேல் இருக்கும். இவரின் சொத்து மதிப்பு சுமார் 50 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

0 comments: