Friday, 12 January 2018

மூன்று மாத விசா..! மாதம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பிச்சைக்காரன்...!!


துபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்று வருபவர்கள் அவர்களின் காலம் முடிந்த பின்னரும் அங்கேயே சட்ட விரோதமாக தங்கி இருப்பது அதிகரித்து வருகிறது.

அங்கு சுற்றுலா செல்லும் பயணிகள் தெருவோரங்களில் கடைகளை போட்டு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த பொருட்கள் அந்த நாட்டு பொருட்களை விட மலிவாக கிடைப்பதால் அமோகமாக விற்பனையாகிறது. இவர்கள் விசா காலம் முடிந்தும் சட்ட விரோதமாக தங்கியிருந்து கடையை போட்டு விடுகின்றனர்.

இவர்கள் விற்கும் பொருட்கள் தரமற்றவை. எனவே அதனை வாங்க வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டும் இன்றி இங்கு சுற்றுலா விசாவில் வந்து பிச்சை எடுப்பவர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை மசூதி முன்பு நின்று பிச்சை எடுக்கின்றனர்.

இதன் மூலம் இவர்கள் மாதம் ஒன்றுக்கு கோடி கோடியாக சம்பாதிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. துபாய் போலீசார் ஒரு பிச்சைக்காரரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் இலங்கை நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

அவர் மாதம் ஒன்றுக்கு சுமார் 55 ஆயிரம் பவுண்ட் சம்பாதிப்பது தெரியவந்துள்ளது. இது இலங்கை மதிப்பு ரூ 1.40 கோடியாகும். எனவே மசூதி முன்பு நின்று பிச்சை எடுப்பவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: