ரஷ்யாவின் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருபவர் அன்னா கிம். இவர் சமீபத்தில் சமூக வலைளத்தில் சில படங்களை பதிவிட்டார். இந்த படங்கள் காண்போரை அதிர்ச்சி அடைய வைத்தது.
காரணம் அதில் ஒரு நோயாளி உயிருக்கும் போராடும் நிலையில் உள்ளார். இவர் தனது சக ஊழியருடன் சேர்ந்து கொண்டு பல்வேறு விதமான போஸ் கொடுத்து போட்டோ எடுத்துள்ளார்.
மேலும் அவர் அதில், நாங்கள் உதவி கட்டாயம் தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டும்தான் உதவுவோம். உயிருக்கு போராடும் நோயாளிகளை சங்கிலியால் படுக்கையோடு சேர்த்து பிணைத்து வைப்போம் என்று கூறி உள்ளார்.
இந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கண்டன குரல்கள் எழுந்துள்ளது. ஆனாலும் சம்பந்தப்பட்ட நர்ஸ் மீது மருத்துவமனை நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: