Thursday, 23 November 2017

20 லட்ச ரூபாய் கடனுக்காக 7 கோடியை இழந்த பார்த்திபன்..! எல்லாம் கந்து வட்டி கொடுமை...!!


கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட இணை தயாரிப்பாளர் அசோக் குமார் போன்று இனி எந்த தயாரிப்பாளருக்கும் நடக்கக்கூடாது என சினிமா துறையினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தன் 20 லட்ச ரூபாய் கடனுக்காக 7 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை விற்றதாக தெரிவித்துள்ளார்.

"வெறும் 20 லட்ச ரூபாய் கடனுக்காக வளரசவாக்கத்தில் இருந்த 75 லட்சம் மதிப்புள்ள என் பங்களாவை விற்றேன்.

இன்று அதன் மதிப்பு ஏழு கோடி ரூபாய். வாங்கிவிடலாம், இன்னும் சரியான படம் பண்ணுனா நாளைக்கே வாங்கிவிடலாம் என்று நினைத்து இன்றுடன் 13 வருஷம் ஆகிவிட்டது.

இப்பவும் என் வாழ்க்கையில் பெரிய தவறாக நினைப்பது அதைத்தான். ஆனால், மனசில் என்ன சந்தோஷம் என்றால், 'யாருக்கும் நம்ம 10 பைசாகூட பேலன்ஸ் வைக்கவில்லை'' என்பதுதான்" என பார்த்திபன் கூறியுள்ளார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: