ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக 9 பேர் கொண்ட குழுவை தலைமை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவர்கள் டிசம்பர் 4ம் தேதி சென்னைக்கு வருகை தர உள்ளனர்.
கடந்த முறை நடைபெற்ற தேர்தலின்போது கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா நடைபெற்றதால் தேர்தல் நிறுத்தப்பட்டது. மறுபடியும் அதே தவறுகளை பின்பற்றாதவாறு தேர்தல் ஆணையம் தெருவுக்கு தெரு துணை ராணுவப்படையை வைத்து தீவிரமாக கண்காணிக்கும்.
அதே போன்று சென்னை மாவட்டத்தில் எந்த கடையிலும் டோக்கன் மூலம் பொருட்கள் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி மீறி பொருட்கள் கொடுக்கும் கடையின் உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: