Saturday, 25 November 2017

இரட்டை இலை கிடைச்சா என்ன.. ஆர்.கே.நகரில் திமுக ஜெயிக்கும்.. மு.க.ஸ்டாலின்!


அதிமுகவினருக்கு இரட்டை இலை சின்னம் கிடைச்சது பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக நிச்சயம் ஜெயிக்கும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஜனநாயக முறையில் ஆர்.கே.நகர் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.

இரட்டை இலை சின்னம் அதிமுகவினருக்கு மீண்டும் கிடைத்தது பற்றி எங்களுக்கு கவலையில்லை.

காங்கிரஸ் மட்டுமின்றி பிற கட்சிகளிடம் இருந்து ஆதரவு கேட்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: