Thursday, 23 November 2017

ஓபிஎஸ், வித்தியாசாகர ராவை பிடித்து விசாரிங்க.. ஜெ.மரணம் உண்மை தெரியும்! நந்தினி மனு.!



மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மனு அளித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு வகையான சந்தேகங்கள் உள்ளது.

எனவே பொறுப்பு ஆளுநராக இருந்த வித்தியாசாகர ராவ், மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவரும் தற்போது துணை குடியரசுத்தலைவருமான வெங்கய்யா நாயுடுவையும் விசாரிக்க வேண்டும்.

மேலும், பன்னீர்செல்வத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் ஜெ.மரணம் தொடர்பான உண்மைகள் வெளியே தெரியவரும் என்று விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: