Thursday, 23 November 2017

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கே இரட்டை இலை.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!



முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் உட்கட்சி பிரச்சனையால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. இதன் பின்னர் இரண்டு அணிகளாக பிரிந்து இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி ஆணையிட்டுள்ளது.

இதனை சற்றும் எதிர்பாராத தினகரன் அணி கடும் அதிருப்தியில் உள்ளது. தற்போது இரட்டை இலை சின்னம் பெற்ற அணியே கட்சியின் அதிகாரப்பூர்வ லட்டர் பேடு அனைத்தும் உபயோகப்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: