Thursday, 23 November 2017

பைனான்சியர் அன்புச்செழியன் வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டமா? பரபரப்பு தகவல்.!



தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காரணம் பைனான்சியர் அன்புச்செழியன் என்று அசோக்குமார் தனது கைப்பட கடிதம் எழுதி வைத்ததை காவல்துறையினர் மீட்டனர்.

இதனையடுத்து அன்புச்செழியனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வரும் நிலையில்,

அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையத்திலும் அவரது புகைப்படத்தை கொடுத்து கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அன்புச்செழியன் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரது கைப்பேசி எண்ணையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: