Sunday, 26 November 2017

தோனி பெரும் கோவக்காரர்… உண்மையை உடைத்த சுரேஷ் ரெய்னா


கூல் கேப்டன் என்ற பெயரை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கடந்த பல வருடங்கள் தக்க வைத்துள்ளது எவ்வாறு என்ற ரகசியத்தை சுரேஷ் ரெய்னா தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளையான சுரேஷ் ரெய்னா – தோனி இடையேயான நட்பு நாம் அறிந்ததே.

குட்டி தல என்று அழைக்கப்படும் அளவிற்கு தனக்கென பெரும் ரசிகர் படையை வைத்துள்ள சுரேஷ் ரெய்னா, சமீபகாலமாக தனது மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடனான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

தோனி குறித்து பேசிய ரெய்னா “தோனி யார் மீதும் கோவமே கொள்ள மாட்டார் என்று பலரும் கூறுகின்றனர், ஆனால் உண்மையில் தோனி கேமரா முன்னாள் மட்டும் தான் தனது கோபத்தை வெளிப்படுத்த மாட்டார்,

ஒரு  இடைவேளையின் போது தவறு செய்தவர்  யாராக இருந்தாலும் அவரை  ஒரு பிடி பிடித்துவிடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: