நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இன்று அதிரடியாக அறிவித்தார். இது தமிழக அரசியரலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ரஜினியின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதுபோல பா.ஜவின் தமிழிசை சவுந்தரராஜனும் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். அவர் ஊழலற்ற ஆட்சியை தர விரும்புகிறார்.
அதுபோல மோடியும் ஊழலற்ற ஆட்சியைத்தான் தந்து கொண்டிருக்கிறார். எனவே பா.ஜனதாவை ரஜினிகாந்த் நிச்சயம் ஆதரிப்பார் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

0 comments: