கடந்த 2005ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்து தமிழ் சினிமாவில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்திய படம் காதல். இதில் கரட்டாண்டி என்ற வேடத்தில் நடித்த சிறுவன் பெயர் அருண் குமார். இவர் இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
அதில் விஜய் நடித்த சிவகாசி, கள்வனின் காதலி போன் படங்களும் அடங்கும். இதனை தொடர்ந்து படிக்க போய் விட்டார். படிப்பை முடித்து தற்போது வாலிப வயதை எட்டி உள்ளார்.
இவர் தற்போது எங்கு உள்ளார். என்ன செய்கிறார் என தெரியாமல் இருந்தது.
சினிமா வாய்ப்புக்காக கோடம்பாக்கம் முழுவதும் அலைந்து பார்த்து உள்ளார். எந்த இயக்குனரும் வாய்ப்பு தரவில்லை. இவரது சொந்த ஊர் தூத்துக்குடி. அங்கு ஒரு சிறு தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

0 comments: