Thursday, 22 March 2018

மெலிந்து போய் பரிதாபமாக காட்சி தரும் புஷ்டி நடிகை..! மெலிய வைத்தது யார்...!!

மெலிந்து போய் பரிதாபமாக காட்சி தரும் புஷ்டி நடிகை..! மெலிய வைத்தது யார்...!!


தமிழ் பட உலகில், ஒப்பனை இல்லாமலே அழகாக இருக்கும் கதாநாயகிகள், வெகு சிலர்தான். அவர்களில், ஹன்சிகாவும் ஒருவர்.

தங்க நிறத்தில் பளிச் என்று தெரிகிற ஹன்சிகா சற்றே பருமனாக– ‘சின்ன குஷ்பு’ என்ற பட்டத்துக்கு பொருத்தமாக இருந்தார். அவரை தேடி ஒரு இந்தி பட வாய்ப்பு வந்திருப்பதால், உடலை மெலிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

யோகா, கடுமையான உணவு கட்டுப்பாடு மற்றும் கடின உடற் பயிற்சி மூலம் ஹன்சிகா மெலிந்து இருக்கிறார். உடல் எடையை 10 கிலோ குறைத்து இருக்கிறார்!

Tuesday, 23 January 2018

 எலும்பும் தோலுமாக மாறி..! பரிதாபமாக இறந்து போன அழகு நடிகை...!!

எலும்பும் தோலுமாக மாறி..! பரிதாபமாக இறந்து போன அழகு நடிகை...!!


அந்த காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு இணையாக மதிக்கப்பட்டவர், செல்வ செழிப்போடு திகழ்ந்தவர் நடிகை சாவித்திரி. இவர் சென்னை, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பல்வேறு இடங்களில் மாட, மாளிகைகளை வாங்கி போட்டவர். சொந்தமாக ஸ்டுடியோவும் வைத்திருந்தார்.

ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு குழந்தை பிறந்து உடன் கருத்துவேறுபாடு காரணமாக ஜெமினி கணேசனை பிரிந்தார். ணூகணவன் பேச்சை மீறி படம் எடுத்து சொத்துகளை இழந்தார்.

யூதனக்கு சொந்தமாக இருந்த மாட மாளிகை மற்றும் ஸ்டுடியோக்களை விற்றார். கடைசியில் சிறிய வாடகை வீட்டில் குடியேறினார். குடிபோதைக்கு அடிமையாகி இருந்த சொத்துகள் அனைத்தையும் இழந்தார்.

இனிமேல் குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு ஆளானார். குடிக்க பணமின்றி கிடைக்கும் சிறு சிறு வேடங்களில் நடித்தார். இறுதியில் ஒருநாள் குடிபோதையில் சுயநினைவின்றி ரோட்டோரம் படுத்து கிடந்ததாக கூறப்படுகிறது.

எலும்பும் தோலுமாக அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போயிருந்தார். இவரை உறவினர்கள் மீட்டு மருத்துவனையில் சேர்த்தனர். கோமாவில் இருந்த நடிகை சாவித்திரி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். 
 பலருடன் தொடர்பு..! காதல் மனைவியை 20 நாளில் கொலை செய்த கணவன்...!!

பலருடன் தொடர்பு..! காதல் மனைவியை 20 நாளில் கொலை செய்த கணவன்...!!


திருச்சி மாவட்டம் எரகுடியை சேர்ந்தவர் சரண்யா (19). கல்லூரியில் இரண்டாமாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் அவரது தாய்மாமன் விஜய் என்பவரை காதலித்து வந்தார்.
கடந்த 1ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் விஜய் வீட்டின் மாடியிலேயே தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

விஜய்க்கு சரண்யாவை தவிர வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்து வந்தது. இதனை தெரிந்து கொண்ட சரண்யா, இது குறித்து கேட்டார். நேற்று முன்தினம் இது தொடர்பாக நள்ளிரவில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த விஜய் சரண்யாவின் கழுத்தை பிளேடால் அறுத்து கொலை செய்தார். அடுத்த நாள் காலை விஜயின் பெற்றோர் பார்த்தபோது சரண்யா கொலை செய்யப்பட்டு கிடக்க விஜய் அருகில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

விஜயை கைது செய்த போலீசார் விசாரித்தபோது, சரண்யாவுக்கு ஏற்கனவே பலருடன் கள்ள தொடர்பு இருந்தது. இதனால் அவரை கொலை செய்தேன் என கூறி உள்ளார்.

Monday, 22 January 2018

சூர்யாவுக்காக நடிகர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு..! சிவக்குமார் குடும்பம் ஹேப்பி...!!

சூர்யாவுக்காக நடிகர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு..! சிவக்குமார் குடும்பம் ஹேப்பி...!!


நடிகர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர் இந்தியில் அமிதாப்பச்சனுடன் நடிப்பதாக செய்திகள் வெளியாகியது.

சன் தொலைக்காட்சியில் இதனை கிண்டல் செய்து இரண்டு தொகுப்பாளினிகள் பேசி இருந்தனர். இதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். சூர்யா ரசிகர்கள் கொந்தளித்து போய் உள்ளனர்.

இந்த நிலையில், சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நடிகர் சங்கத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசில் நடிகர் விஷால் கையெழுத்திட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயிலில் இருந்து குதித்து பிரபல இளம் நடிகர் தற்கொலை? சோகத்தில் திரையுலகம்...!!

ரயிலில் இருந்து குதித்து பிரபல இளம் நடிகர் தற்கொலை? சோகத்தில் திரையுலகம்...!!


மராத்திய மொழியில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பிரபுல் பொலிரோ. இவர் நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணி அளவில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார்.

ரயிலானது மும்பையின் மலாட் ரயில் நிலைய நடைமேடைக்கு வந்தடைந்த பின்னர் மீண்டும் புறப்பட்டு சென்றது. ரயில் புறப்பட்டபோது ரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவில் உள்ள தண்டவாளத்தில் கீழே விழுந்தார்.

இதனை பார்த்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இவர் ஏன் அதிகாலை நேரத்தில் ரயிலில் பயணம் செய்தார். தவறி கீழே விழுந்தாரா அல்லது தற்கொலை செய்யும் நோக்கத்தில் கீழே குதித்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு வழியாக நடந்து முடிந்தது பிரபல நடிகையின் திருமணம்...!!

ஒரு வழியாக நடந்து முடிந்தது பிரபல நடிகையின் திருமணம்...!!


நடிகை பாவானாவும் கன்னட தயாரிப்பாளர் நவீனும் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடந்தது. 2017 அக்டோபரில் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் பாவனாவை காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார் என செய்திகள் வெளியாகியது. இது தொடர்பாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

அக்டோபரில் நடைபெறுவதாக இருந்த திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. திருமணம் தள்ளி வைப்பதற்கு நவீன்தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் அதனை பாவனா மறுத்து வந்தார்.

மேலும் நவீனின் தாயார் இறந்ததால் திருமணம் தள்ளி வைக்கப்பட்து என்று பாவனாவின் பெற்றோர் விளக்கம் அளித்தனர். அதன்பிறகு டிசம்பர் 22ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது

பின்னர் ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஜனவரி 22ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக நடிகை பாவனாவே ஒரு நேர்க்காணலில் தெரிவித்து இருந்தார்.

அதோடு திருமணம் மார்ச் அல்லது ஏப்ரலில் நடக்கும் என்ற செய்திகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் திருமணம் நிச்சயக்கப்பட்ட  தேதிக்கு 2 நாள் முன்னதாகவே அதாவது ஜனவரி 21ம் தேதியே நடிகை பாவனாவின் திருமணம் கேரளாவில் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முரளி இறந்த பின் அவரது குடும்பம்..! இரண்டாவது மகன், மகள் யார் தெரியுமா?

முரளி இறந்த பின் அவரது குடும்பம்..! இரண்டாவது மகன், மகள் யார் தெரியுமா?


தமிழில் பூ விலங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் முரளி. பெங்களூரை சேர்ந்த இவரது தந்தை சித்தலிங்கையா. ணூகன்னடத்தில் பிரபல தயாரிப்பாளர். சிறுவயது முதலே நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. னுஎனவே 1984ம் ஆண்டு கன்னடத்தில் பிரமே பர்வம் என்ற படத்தில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகி, 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதயம், புதுவசந்தம், போன்ற படங்கள் இவருக்கு பெரிய அளவில் புகழை பெற்று தந்த படங்கள்.

இவருடைய மூத்த மகன் அதர்வா. இவர் பானா காத்தாடி படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இமைக்காத நொடிகள் ஒத்தைக்கு ஒத்தை படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் முரளி கடந்த 2010ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக இறந்து போனார். இவருக்கு அதர்வாக தவிர ஆகாஷ் என்ற மற்றொரு மகனும், காவியா என்ற மகளும் உள்ளனர்.
இதில் அதர்வா மட்டுமே சினிமாவில் நடித்து வருகிறார். மற்ற இருவரும் இன்னும் சினிமா துறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.